/* */

சங்கராபுரம் தீவிபத்து சம்பவம்: பட்டாசுக் கடை உரிமம் தற்காலிக ரத்து

சங்கராபுரம் பட்டாசு கடை விற்பனைக்கான உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து டி.ஆர்.ஓ., விஜய்பாபு உத்தரவிட்டுள்ளார்.

HIGHLIGHTS

சங்கராபுரம் தீவிபத்து சம்பவம்: பட்டாசுக் கடை உரிமம் தற்காலிக ரத்து
X

பைல் படம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தைச் சேர்ந்தவர் செல்வகணபதி, 47; இவரது கடையில் பட்டாசு விற்பனைக்கு நிரந்தர உரிமம் பெற்றிருந்தார்.

வரும் 2022ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி வரை உரிமம் புதுக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 26 ம் தேதி பட்டாசுகள் இருப்பு வைத்திருந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 8 பேர் இறந்தனர். 10 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், சுற்று வட்டார பகுதியில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் பொருட்கள் சேதமடைந்தன. கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., சரவணன் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில் விதிகளை மீறி அளவுக்கு அதிகமான வெடிபொருட்களை வைத்திருந்ததால் விபத்து ஏற்பட்டது தெரிந்தது.

இதனையடுத்து, செல்வகணபதியின் சில்லரை பட்டாசு கடை விற்பனைக்கான உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து டி.ஆர்.ஓ., விஜய்பாபு உத்தரவிட்டுள்ளார்.

Updated On: 30 Oct 2021 12:05 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்