Begin typing your search above and press return to search.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
HIGHLIGHTS
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் இன்று இந்திய மாதர் தேசிய சம்மேளனம் மாவட்ட குழு சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் மாவட்ட செயலாளர் ஆ.வளர்மதி தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட குழு உறுப்பினர் ரிதா முன்னிலை வகித்தார். சிபிஐ மாவட்ட செயலாளர் தோழர் அப்பாவு, வட்ட செயலாளர் கருணாநிதி, விவசாயிகள் சங்கம் தோழர் கஜேந்திரன் ஆகிய தோழர்கள் கண்டன உரையாற்றினார்கள்.
இந்த போராட்டத்தில் சட்டமன்றம் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஐ.,யை சேரந்த தோழர்கள் பங்கேற்றனர்.