Begin typing your search above and press return to search.
களளக்குறிச்சி மாவட்டத்தில் முகக்கவசம் இன்றி வந்தவர்களுக்கு அபராதம் விதிப்பு
சின்னசேலம் பகுதியான பஸ் நிலையம், கூகையூர்சாலை, மூங்கில்பாடி ரோடு ஆகிய பகுதிகளில் முகக்கவசமின்றி வந்தவர்களுக்கு அபராதம்
HIGHLIGHTS
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு கடந்த மாதங்களில் குறைந்து வந்த நிலையில், தற்போது நாளொன்றுக்கு பாதிப்பு 200ஐ தாண்டியுள்ளது. இதனால் சுகாதாரம், காவல்துறை மற்றும் வருவாய் துறையினர் பொதுமக்கள் வெளியில் செல்லும் போது, முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.இந்நிலையில், சின்னசேலம் நகர பகுதியான பஸ் நிலையம், கூகையூர் சாலை, மூங்கில்பாடி ரோடு ஆகிய பகுதிகளில் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அவ்வழியாக முக கவசமின்றி வாகனங்களில் வந்தவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.