Begin typing your search above and press return to search.
நகைகளை உருக்கும் திட்டத்தை உடனடியாக கைவிட இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட இந்து முன்னணி சார்பில் கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை உடனடியாக கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
HIGHLIGHTS
கள்ளக்குறிச்சி மாவட்ட இந்து முன்னணி சார்பில் கோவில் நகைகளை உருக்கும் திட்டத்தை உடனடியாக கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச் செயாளர் சக்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரமணி முன்னிலை வகித்தார்.
மாநில செயற்குழு உறுப்பினர்கள் பாலு, மணி, மாவட்ட செயலாளர்கள் பாக்கியராஜ், முத்தையன் சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், இந்து கோவில்களில் உள்ள நகைகளை உருக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேசினர்.ஒன்றிய செயலாளர் சிவா நன்றி கூறினார்.