/* */

சங்கராபுரம் அருகே சாலையோரம் கவிழ்ந்த அரசு பேருந்து: 9 பேர் படுகாயம்

சங்கராபுரம் அருகே அரசு பேருந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் படுகாயமடைந்தனர்.

HIGHLIGHTS

சங்கராபுரம் அருகே சாலையோரம் கவிழ்ந்த அரசு பேருந்து: 9 பேர் படுகாயம்
X

பள்ளத்தில் கவிழ்ந்த அரசுப்பேருந்து.

சங்கராபுரம் அடுத்த சு.குளத்தூர் பிரிவு சாலை அருகே அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. சென்னையில் இருந்து நேற்று முன்தினம் திருவண்ணாமலை வழியாக கள்ளக்குறிச்சிக்கு 9 பயணிகளுடன் டி.என்.21.என் 1316 என்ற பதிவெண் கொண்ட அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.

பேருந்தை சோழம்பட்டு கிராமம் முத்து மகன் வீரன் ஓட்டி வந்தார். இரவு சங்கராபுரம் - திருவண்ணாமலை சாலையில் சு.குளத்துார் பிரிவு சாலை அருகே வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்புக் கட்டையில் மோதி இடது பக்கத்தில் பஸ் கவிழ்ந்தது. இதில் டிரைவர், கண்டக்டர் உள்ளிட்ட 9 பேரும் காயமடைந்தனர்.

அனைவரும் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். விபத்து குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Updated On: 11 Feb 2022 2:25 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்