சித்தோடு அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது

சித்தோடு அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது
X

மணிமேகலா, கோபால்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

சித்தோடு அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே உள்ள வாய்க்கால்மேடு செங்குந்தபுரத்தை சேர்ந்தவர் கோபால் (வயது 43). வெல்டிங் தொழிலாளி. இவரது மனைவி மணிமேகலா (வயது 40). இவர்களுக்கு 10 மற்றும் 7 வயதில் இரு மகன்கள் உள்ளனர்.

மணிமேகலா சித்தோடு அருகே வசுவப்பட்டியில் ஒரு மிக்சர் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கோபால் மனைவியை பிரிந்து, வேறு பகுதியில் தங்கி வேலைக்கு சென்று வந்தார்.

இந்த நிலையில், முன்னாள் காதலனான மோகன்ராஜ் என்பவருடன் மணிமேகலா ஒரே வீட்டில் குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது. இதையறிந்த கோபால், செங்குந்தபுரத்தில் உள்ள வீட்டுக்கு நேற்று சென்று, மகன்களை பார்த்து பேசியுள்ளார்.

பின்னர், நேற்று மதியம் வசுவப்பட்டி சென்ற கோபால், மிக்சர் கம்பெனியில் இருந்த மனைவியை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், கோபால் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், மனைவி கழுத்தில் சரமாரியாக குத்தினார்.

இதில், சத்தம் போட்டபடி சரிந்த மணிமேகலாவை, பிற தொழிலாளர்கள் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனிடையே, கத்தியுடன் சித்தோடு காவல் நிலையத்தில் சரணடைந்த கோபாலை போலீசார் கைது செய்தனர். மேலும், இதுகுறித்து மோகன்ராஜுவிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
Similar Posts
கோபி அருகே முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
ஈரோட்டில் போலி பிறப்பு சான்றிதழ் தயாரித்ததாக ரியல் எஸ்டேட் அதிபர், இ-சேவை மைய உரிமையாளர் உள்பட 4 பேர் கைது
சத்தியமங்கலம் அருகே திம்பம் மலைப்பாதையில் சரக்கு வேன் கவிழ்ந்து விபத்து
சித்தோடு அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவன் கைது
கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.18.39 லட்சத்துக்கு தேங்காய் ஏலம்
ஒலகடம் அருகே சட்டவிரோதமாக ஏரியிலிருந்து மண் திருட்டு..!
டி. என். பாளையம் அருகே தோட்டத்தில் கட்டிவைத்திருந்த ஆடுகள் திருட்டு : போலீஸார் விசாரணை
சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச தேரோட்டம் கோலாகலம்
சிக்கய்ய நாயக்கா் கல்லூரியை அரசுக் கல்லூரியாக்க குடியரசுத் தலைவா் ஒப்புதல்..!
நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீா் கூட்டம்
குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவுப்படுத்தி பேசிய அரசு பெண் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க புகார்..!
புதிய பேருந்து நிலையத்தில் ஆணையா் ரா.மகேஸ்வரியின் ஆய்வு
புதிய தொழிற்பள்ளிகள் தொடங்க மற்றும் புதுப்பிக்க வரும் பிப்.28-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்