டூவீலர் திருடியவர் கைது..!
![டூவீலர் திருடியவர் கைது..! டூவீலர் திருடியவர் கைது..!](https://www.nativenews.in/h-upload/2025/02/11/1976958-kljkjj.webp)
திருச்செங்கோடு தொண்டிக்காடு அடுத்த வீடில்லாதோர் காலனியைச் சேர்ந்தவர் காஜா(45). இவர் சங்ககிரி பட்டரைமேட்டில் உள்ள ஒரு ஹைட்ராலிக் பட்டரையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம், தனது டூவீலரை வீட்டில் முன்பு நிறுத்தி விட்டு தூங்கச் சென்றார். காலையில் எழுந்து பார்த்தபோது டூவீலரை காணவில்லை.
டூவீலர் தேடல்
இதுகுறித்து அவர் நண்பருடன் பல இடங்களில் தேடினார். அப்போது தோக்கவாடி அருகே ஒருவர் காஜாவின் டூவீலருடன் நின்று கொண்டிருப்பதை கண்டு, அவரை விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார்.
போலீசில் புகார்
இதையடுத்து, இருவரும் அவரை பிடித்து திருச்செங்கோடு நகர போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் ஈரோடு வளையக்காரபட்டியைச் சேர்ந்த தம்பி (எ) நாகராஜ்(42) என்பது தெரிய வந்தது.
வழக்கு பதிவு மற்றும் கைது
இதையடுத்து, போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து, அவரை திருச்செங்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
நீதிமன்ற உத்தரவு
நீதிபதி சுரேஷ்பாபு அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu