/* */

விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வேண்டி இந்து முன்னணியினர் உண்ணாவிரதம்

தாடிக்கொம்பு சாலையில் அமைந்துள்ள சித்தி விநாயகர் கோயிலில் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வேண்டி இந்து முன்னணியினர்  உண்ணாவிரதம்
X

திண்டுக்கல்லில் விநாயகர்கோவிலில் திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்ட இந்து முன்னணியினர்.

திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் அமைந்துள்ள, சித்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வேண்டி, இந்து முன்னணியினர் திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விநாயகர் சதுர்த்தியில் கோவில்களைத் திறக்க வலியுறுத்தியும் வீதிகள் தோறும் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதிக்க கோரியும், இந்து முன்னணி அமைப்பின் சார்பில் தாடிக்கொம்பு சாலை சித்தி விநாயகர் கோவில் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் இந்து முன்னணியினர் ஈடுபட்டனர்.

மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் கடும் நெருக்கடி கொடுப்பதாகவும், தமிழக அரசின் உத்தரவை சுற்றிக் காட்டி, விநாயகர் சதுர்த்தியை தடுக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியும், இந்து முன்னணியின் மாவட்ட செயலாளர் சஞ்சீவிராஜ், கோட்ட செயலாளர் சங்கர் கணேஷ், மாவட்ட துணைத்தலைவர் வினோத்ராஜ் ஆகியோர் தாடிக்கொம்பு சாலையில் அமைந்துள்ள சித்தி விநாயகர் கோயிலில் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த, திண்டுக்கல் புறநகர் துணை காவல் கண்காணிப்பாளர் சுகுமார், நகர் துணை காவல் கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன் ஆகியோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. போக்குவரத்து அதிகம் நிறைந்த சாலையில் அமைந்துள்ள விநாயகர் கோயில் முன்பு இந்து முன்னணியினர் திடீர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 9 Sep 2021 4:10 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...