/* */

வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்துவது மருத்துவ வழிகாட்டுதலுக்கு எதிரானது

தடுப்பூசி இலக்கை எட்டுவதற்காக கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களையும் பொறுப்பாக்குவதை கைவிட வேண்டும்

HIGHLIGHTS

வீடு வீடாக சென்று தடுப்பூசி  செலுத்துவது மருத்துவ வழிகாட்டுதலுக்கு எதிரானது
X

திண்டுக்கல்லில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு பொது சுகாதார செவிலியர் கூட்டமைப்பு மாநில தலைவர் நிர்மலா

வீடு வீடாக சென்று தடுப்பூசி என்பது மருத்துவ வழிகாட்டுதலுக்கு எதிரானது. நடைமுறை சிரமமும் சிக்கலும் நிறைந்தது என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கை பெருந்திரள் முறையீடாக மனு கொடுத்துள்ளதாக கிராம செவிலியர் சங்க மாநிலத் தலைவி நிர்மலா தெரிவித்தார்.

திண்டுக்கல் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனரிடம் பெருந்திரள் முறையீடு மனு கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பொது சுகாதார செவிலியர் கூட்டமைப்பு மாநில தலைவர் நிர்மலா அளித்த பேட்டி:,

கொரோனா தடுப்பூசி முகாமினை வெள்ளி அல்லது சனிக்கிழமை நடத்த வேண்டும். வீடு வீடாக சென்று தடுப்பூசி என்பது மருத்துவ வழிகாட்டுதலுக்கு எதிரானது. நடைமுறை சிரமமும் சிக்கலும் நிறைந்தது. எனவே தயவுசெய்து பொது இடங்களில் குழுவாக பணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தடுப்பூசி இலக்கை எட்டுவதற்காக கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் மருத்துவர்களையும் பொறுப்பாக்குவது, மெமோ உள்ளிட்ட தண்டனை வழங்குவதையும் ரத்து செய்ய வேண்டும். மே மாதம் நடத்த வேண்டிய கிராம சுகாதார செவிலியர்களுக்கு, பகுதி சுகாதார செவிலியர் பதவி உயர்விற்கான நேர்காணலா உடனடியாக நடத்தப்பட வேண்டும்.கொரோனா தடுப்பூசி மணிக்கு கூடுதல் செவிலியர்களை நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 கோரிக்கைகளை அடங்கிய மனு அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

Updated On: 18 Nov 2021 5:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...
  3. லைஃப்ஸ்டைல்
    மனதைத் திறப்பது: பாசம் வழியான பயணம்
  4. லைஃப்ஸ்டைல்
    "நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்": கைவசப்படுத்தும் காதல் மேற்கோள்கள்
  5. குமாரபாளையம்
    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதிவு...
  6. நாமக்கல்
    நாமக்கல் டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு...
  7. தமிழ்நாடு
    புதிய ‘லே அவுட்’ அனுமதியை நிறுத்த முடியாது..!
  8. வால்பாறை
    பொள்ளாச்சியில் கனமழை காரணமாக ஒரு இலட்சம் வாழைகள் சேதம்
  9. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  10. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’