திண்டுக்கல்லில் கோயில்கள் திறப்பு: பக்தர்கள் சுவாமி தரிசனம்
திண்டுக்கல்லில் ஊரடங்கு தளர்வில் கோயில்கள் திறப்பு பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சுவாமி தரிசனம்.
HIGHLIGHTS
கொரானா இரண்டாவது அலையால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படாமல் இருக்க தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. தொற்று குறைய குறைய தளர்வுகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் தொற்று குறைந்துள்ள 23 மாவட்டங்களில் வழிபாட்டுத் தலங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை பிறக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.
அதன்படி திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில், அபிராமி அம்மன் கோயில், வெள்ளை விநாயகர் கோயில், புனித வளனார் தேவாலயம் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றது.
இதில் பக்தர்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். வழிபாட்டுத் தலங்களில் சானிடைசர் தெளிக்கப்பட்டு, சமூக இடைவெளியுடன் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். முக கவசம் அணியாத நபர்கள் ஆலயங்களில் அனுமதிப்பதில்லை. சமூக இடைவெளியுடன் பக்தர்கள் தரிசனத்திற்கு நெருக்கடி இன்றி மிகுந்த மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் செய்தனர்.