கொரொனா ஊரடங்கு பயம் கொஞ்சமும் மக்களிடம் இல்லை
திண்டுக்கல்லில்
HIGHLIGHTS
திண்டுக்கல்லில் கொரொனா பயம் கொஞ்சமும் இல்லையா? போலீஸார் தீவிரம் காட்டினால் தான் ஊரடங்கிற்கு அர்த்தம் கிடைக்கும்
திண்டுக்கல்லில் முழு ஊரடங்கின் போது தேவையின்றி சுற்றும் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களை போலீசார் கவனிக்க வேண்டும். கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருவதால் முழு ஊரடங்குஇரு வாரங்களுக்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.
மதியம் 12:௦௦ மணி வரை அத்தியாவசிய கடைகளை மட்டும் திறக்க அனுமதித்துள்ளனர்.
தினசரி பாதிப்பு இரட்டிப்பாகியும், கொரோனாவின் தீவிரத்தை திண்டுக்கல்லில் யாரும் உணர்ந்ததாக தெரியவில்லை. இங்கொன்றும்,அங்கொன்றுமாக நம் பக்கத்திலேயே தினமும் பலர் பாதிக்கின்றனர்
இருப்பினும் வெளியில் சுற்றுவோர் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது ஊரடங்கை எவரும் கண்டு கொள்வதாக தெரியவில்லை நகருக்குள் போலீசார் கண்துடைப்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
போலீசார் கண்ணில் படாததால் பொது மக்கள் அலட்சியமாக நடக்கின்றனர்.மதியம் 3 மணிக்கு மேல் இயல்பு நிலைக்குத் திரும்பியது போல் உலவுகின்றனர்.
வாகனங்கள் சென்ற வண்ணம் உள்ளது. இளைஞர்கள் ரேஸ் பைக்கில் வலம் வருகின்றனர். சுற்றுலா செல்வோரைப்போல காரில் செல்வோரை பார்க்க முடிகிறது.போலீசார் பணியில் தீவிரம் காட்டினால்தான் ஊரடங்கிற்கு அர்த்தம் இருக்கும். கடந்தாண்டு
போலீசாரின் தீவிர நடவடிக்கை கொரோனா பரவலை கட்டுப்படுத்த பேருதவியாக இருந்தது. இம்முறையும் அதேபோல் பின்பற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர் .