Begin typing your search above and press return to search.
சாக்கடை கால்வாயை தூர்வார பொதுமக்கள் கோரிக்கை
தருமபுரி, பாரதிபுரம் பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன் உள்ள சாக்கடை கால்வாயை தூர்வார அப்பகுதி மக்கள் கோரிக்கை
HIGHLIGHTS
தருமபுரி நகர் பகுதியில் கால்வாய்கள் முறையாக சுத்தம் செய்யப்படாமல் இருப்பதால், பல கால்வாய்கள் குப்பை தொட்டிகளாக மாறியுள்ளது. முறையாக கால்வாய்களை தூர்வாரியிருந்தால் சாக்கடை நீர்கள் வெளியே சென்றிருக்கும்.
தற்போது பாரதிபுரம் சாக்கடை கால்வாய் தூர்வாராமலே உள்ளது. இதனால் கழிவுநீர் செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கியுள்ளது. இதனை தூர்வார வேண்டும் என நகர் பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.