மாட்டுவண்டி, ஸ்கூட்டியுடன் அலப்பரை! மோடிக்காக இந்தி பேசிய கேப்டன்மகன்
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தருமபுரியில் தேமுதிகவினரின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
தருமபுரி மாவட்ட தேமுதிக சார்பில், பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து தருமபுரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்திற்கு வரும்போது தருமபுரி நான்கு ரோடு சந்திப்பில் இருந்து பெட்ரோல், டீசல், விலையை உயர்த்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் மாட்டு வண்டியில் ஸ்கூட்டியை ஏற்றி வைத்து, அதன் மீது அமர்ந்து விஜய பிரபாகரன் ஊர்வலமாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்தார்.
பெட்ரோல், டீசல், கேஸ் விலையை உயர்த்திய மத்திய அரசு, மாநில அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழில் பேசினால், முழக்கங்களை எழுப்பினால், பிரதமர் மோடிக்கு தெரியாது எனக்கூறி, பெட்ரோல், டீசல், உயர்வை கண்டித்து, விஜய பிரபாகரன் ஹிந்தியில் முழக்கமிட்டார்.
மேலும் எல்லா பிரச்சினைகள் குறித்தும் ஊழல்கள் குறித்தும் புள்ளிவிவரம் கொடுக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என விஜய பிரபாகரன் கேள்வி எழுப்பினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட தேமுதிக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.