Begin typing your search above and press return to search.
தருமபுரி: தெருக்கூத்து கலைஞர்களுக்கு நிவாரண பொருட்கள்
தருமபுரி மாவட்டத்தில், முழு ஊரடங்கால் வேலையின்றி தவித்து வரும் தெருக்கூத்து கலைஞர்களுக்கு, என்.டி.எஸ்.ஓ.தொண்டு நிறுவனம் சார்பில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.
HIGHLIGHTS
தருமபுரி மாவட்டத்தில், கொரோனா பரவலை தடுக்க, முழு ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கால் பல்வேறு தரப்பை சார்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் குறிப்பாக, தெருக்கூத்து கலைஞர்கள் உணவு இன்றி தவிக்கும் பரிதாப நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் உள்ள 105 தெருக்கூத்து கலைஞர்களுக்கும், ரூ.1000 மதிப்புள்ள மளிகைப்பொருட்கள் வழங்கப்பட்டன. என்.டி.எஸ்.ஓ. தொண்டு நிறுவனத்த்தின் நிறுவனர் ஜேபி, இதற்கான நிதி உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், தருமபுரி திட்ட அலுவலர் ஜாப்ஸ் காமராஜ் கலந்து கொண்டு, தெருக்கூத்து கலைஞர்களுக்கு மளிகை பொருட்ஙகளை வழங்கினார்.