/* */

தலைமை ஆசிரியர் மீது பொய் பாலியல் புகார்: சக ஆசிரியர்கள் குற்றச்சாட்டு

தலைமைஆசிரியர் மீது ஆசிரியர் பொய் பாலியல்புகார் அளித்தாக சக ஆசிரியர்கள் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்

HIGHLIGHTS

தலைமை ஆசிரியர் மீது பொய் பாலியல் புகார்: சக ஆசிரியர்கள் குற்றச்சாட்டு
X

பள்ளியைச் சேர்ந்த பெரும்பாலான ஆசிரிய-ஆசிரியைகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலையில் புகார் அளித்தனர்

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 42 ஆசிரிய-ஆசிரியைகளும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரான ஜா.சோபியா என்பவர் அண்மையில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், பள்ளியைச் சேர்ந்த பெரும்பாலான ஆசிரிய-ஆசிரியைகள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வியாழக்கிழமை மாலையில் புகார் அளித்தனர். அதில், பள்ளியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உடற்கல்வி ஆசிரியர், தலைமை ஆசிரியர் மீது புகார் தெரிவித்து வருகிறார். எனவே அந்த ஆசிரியையின் புகாரை தள்ளுபடி செய்ய வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Updated On: 18 March 2022 4:54 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்னும் மந்திரமே அகிலம் யாவும் ஆள்கிறதே!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘திருமணம் என்பது ஆரம்பத்தில் சொர்க்கம்; திருமணத்துக்கு பிறகு மொத்தமுமே...
  3. ஆன்மீகம்
    சுவாமியே சரணம் ஐயப்பா!
  4. வீடியோ
    Censor Board-டை பற்றி அமீர் பேச்சு !#ameer #ameerspeech #directorameer...
  5. Trending Today News
    ஒரு சீட்டுக்கு விமானத்திலயும் அக்கப்போரா..? (வீடியோ செய்திக்குள் )
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் தொடர்பான உயர் மட்டக் குழு
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த ஜீப்
  8. லைஃப்ஸ்டைல்
    காதலில் சந்தேகம்!? எப்பேர்பட்ட விளைவுகளை ஏற்படுத்தும்...!
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் தனியார் பள்ளி வாகனங்களை கல்வித்துறை செயலாளர் நேரில்...
  10. ஈரோடு
    கோபி கலை அறிவியல் கல்லூரியில் நாளை மறுநாள் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி