/* */

கடலூரில் தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்றவர் ரூ.1 லட்சத்துடன் கைது

கடலூரில் குட்கா பான்மசாலா குட்கா விற்பனை செய்துவிட்டு வந்தவரை போலீசார் ரூ.1 லட்சம் பணத்துடன் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கடலூரில் தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்றவர் ரூ.1  லட்சத்துடன் கைது
X
கைது செய்யப்பட்ட சதீஷ்.

கடலூர் மாவட்டம் எஸ். புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ், இவர் இன்று கடலூர் முதுநகர் வழியாக திருப்பாதிரிப்புலியூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரை கண்டு சதீஷ் வாகனத்தில் வேகமெடுக்க சந்தேகம் அடைந்த போலீசார் சதீசை விரட்டிப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் அவர் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் குட்கா, பான் மசாலா ஆகியவற்றை கடலூர் முதுநகர் பகுதியில் விற்பனை செய்துவிட்டு திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் விற்பனைக்கு கொண்டு வந்ததும் தெரிய வந்தது.

மேலும் அவரிடமிருந்து ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பணமும் இருசக்கர வாகனம், மற்றும் 20 ஆயிரம் மதிப்புள்ள போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்ததோடு சதீசை கைது செய்தனர்.

காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட சதீஷை பயிற்சி டி.எஸ்.பி. யாஸ்மின் விசாரணை மேற்கொண்டு வருகிறார். தற்போது கைது செய்யப்பட்ட சதீஷ் ஏற்கனவே போதைப் பொருட்கள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Updated On: 12 Dec 2021 4:21 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்