கடலூரில் தடை செய்யப்பட்ட போதை பொருள் விற்றவர் ரூ.1 லட்சத்துடன் கைது
கடலூரில் குட்கா பான்மசாலா குட்கா விற்பனை செய்துவிட்டு வந்தவரை போலீசார் ரூ.1 லட்சம் பணத்துடன் கைது செய்தனர்.
HIGHLIGHTS
கடலூர் மாவட்டம் எஸ். புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ், இவர் இன்று கடலூர் முதுநகர் வழியாக திருப்பாதிரிப்புலியூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசாரை கண்டு சதீஷ் வாகனத்தில் வேகமெடுக்க சந்தேகம் அடைந்த போலீசார் சதீசை விரட்டிப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் அவர் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் குட்கா, பான் மசாலா ஆகியவற்றை கடலூர் முதுநகர் பகுதியில் விற்பனை செய்துவிட்டு திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் விற்பனைக்கு கொண்டு வந்ததும் தெரிய வந்தது.
மேலும் அவரிடமிருந்து ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பணமும் இருசக்கர வாகனம், மற்றும் 20 ஆயிரம் மதிப்புள்ள போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்ததோடு சதீசை கைது செய்தனர்.
காவல் நிலையம் அழைத்து செல்லப்பட்ட சதீஷை பயிற்சி டி.எஸ்.பி. யாஸ்மின் விசாரணை மேற்கொண்டு வருகிறார். தற்போது கைது செய்யப்பட்ட சதீஷ் ஏற்கனவே போதைப் பொருட்கள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.