/* */

கடலூர் அருகே தனியார் பேருந்து கண்ணாடியை உடைத்த 3 ரவுடிகள் கைது

கடலூர் அருகே தனியார் பேருந்தை வழிமறித்து கண்ணாடியை உடைத்த 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

HIGHLIGHTS

கடலூர் அருகே தனியார் பேருந்து கண்ணாடியை உடைத்த 3 ரவுடிகள் கைது
X

கடலூரில் தனியார் பேருந்து கண்ணாடியை உடைத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தை மூன்று பேர் இரண்டு சக்கர வாகனத்தில் வந்து வழிமறித்து பேருந்து ஓட்டுநர் தேசிங்குவை தாக்கிவிட்டு அதே அரிவாளால் கண்ணாடியை உடைத்து விட்டு சென்றனர். பேருந்தில் இருந்த சி.சி.டி.வி. காட்சியைக் கொண்டு ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கடலூர் பகுதியை சேர்ந்த பிரிதிவி ராஜன் மற்றும் சீனிவாசன், புதுச்சேரியை சேர்ந்த மருதுவுடன் இணைந்து தகராறு ஏற்பட்டது தெரியவந்தது. மருது பெரிய காட்டு பாளையம் பகுதியில் பேருந்து நிறுத்த முயன்றபோது நிறுத்தாமல் சென்றதால் அவரது நண்பர்களான ரவுடிகளை அழைத்து வந்து மிரட்டல் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்ததையடுத்து மூன்று பேரையும் கைது செய்த ரெட்டிசாவடி போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


சி.சி.டி.வி. பதிவில் தோன்றும் ரவுடிகள் பேருந்து ஓட்டுனரை வெட்டிவிட்டு பேருந்து கண்ணாடிகளை உடைக்கும் பரபரப்பு காட்சி தற்போது வெளியாகி உள்ளது.

Updated On: 2 Dec 2021 6:08 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  3. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  4. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  5. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  7. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  8. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  9. ஈரோடு
    ஈரோட்டில் இன்று (மே.5) 5வது நாளாக 110 டிகிரிக்கு மேல் வெயில் பதிவு
  10. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’