/* */

ஆளுனருடன் ரஜினிகாந்த் சந்திப்பை சீரியசாக எடுக்க வேண்டாம்- வைகோ பேட்டி

ஆளுனருடன் ரஜினிகாந்த் சந்திப்பை சீரியசாக எடுக்க வேண்டாம் என வைகோ அளித்த பேட்டியில் கூறினார்.

HIGHLIGHTS

ஆளுனருடன் ரஜினிகாந்த் சந்திப்பை சீரியசாக எடுக்க வேண்டாம்- வைகோ பேட்டி
X

கோவை காந்திபுரம் வி.கே.கே. மேனன் சாலையில் உள்ள ம.தி.மு.க. அலுவலகத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய வைகோ அண்ணா பிறந்தநாள் அன்று சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாநாட்டிற்கு அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் கோவை மாவட்டத்தில் ம.தி.மு.க. செயல்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, ம.தி.மு.க. புத்துணர்ச்சி பெற்று மீண்டும் தமிழகத்தின் அரசியல் திசையை தீர்மானிக்கின்ற சக்தியாக வளர்ந்து வருகிறது என்பதற்கு அடையாளமாக தான் இடையிலே கோவிட் காலத்தில் நான் சுற்றுப்பயணம் செய்யவில்லை என்றாலும், தற்போது இந்த சுற்றுப் பயணத்தை கொங்கு மண்டலத்தில் தான் துவங்குகிறது. இந்த கொங்கு மண்டலத்தில் தற்பொழுது ஒரு லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர் எனவும் தமிழகம் முழுவதும் அண்ணாவின் பிறந்தநாள் விழா சென்னையில் மிகச் சிறப்பாக நடைபெற்றதாகவும் தெரிவித்தார். பொருளாதார பலம் இல்லை என்றாலும் லட்சிய தாகம் உள்ளது எனவும் தெரிவித்தார்.

ம.தி.மு.க. திமுக ஓட்டு, லட்சிய ரீதியாக உடன்பாடு கொண்டு, சனாதன சக்திகளை வீழ்த்துவதற்கு, ஏகாதிபத்திய சக்திகளை வீழ்த்துவதற்கும் ஒரே நாடு ஒரே மொழி ஒரே கலாச்சாரம் ஒரே மதம் என்று சொல்லக்கூடிய ஏகாதிபத்திய பாசிச கட்சிகளை வீழ்த்தும் அண்ணாவின் வழியில் கருணாநிதி எவ்வாறு கொள்கைகளை பாதுகாத்து வந்தாரோ அது போலவே திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் நடப்பதாக தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள திட்டங்கள் போல் எங்கும் அறிமுகப்படுத்தவோ செயல்படுத்தவோ இல்லை எனவும் தெரிவித்தார். திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான ஆட்சி கொள்கை ரீதியான ஆட்சி எனவும் திராவிட இயக்க லட்சிய ரீதியான ஆட்சி என்ற முறையில் அவர்கள் நடிப்பது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். ஜிஎஸ்டி வரி உயர்வு குறித்த கேள்விக்கு அவர் பதில் அளித்தார், அதனால் மிகப்பெரிய பாதிப்பிற்கு மக்கள் ஆளாகி இருப்பதாகவும் ஜி. எஸ் .டி. யினால் பொதுமக்கள் மிதிக்கப்படுகிறார்கள் என்றும் அதானியோ அம்பானியோ அல்ல என தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வினால் அனைத்து பொருட்களும் விலை உயர்ந்ததாகவும் அவர் மோடி அரசின் மீது மக்களுக்கு நாள்தோறும் வெறுப்பு அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கும் பேசுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று வெங்கையா நாடு கூறியது குறித்த கேள்விக்கு அது சரிதான் என தெரிவித்த அவர், நடுநிலையோடு வெங்கையா நாயுடு அதனை கூறியுள்ளதாகவும் அதனை ஆளுகின்ற கட்சி பின்பற்றினால் நல்லது எனவும் தெரிவித்தார்.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு அனைத்து இல்லங்களிலும் கொடியேற்றுவது குறித்து கருத்து கேட்டதற்கு தேசிய கொடியை ஏற்றுவது நல்ல திட்டம் தான் எனவும் அது வரவேற்கத்தக்கது தான் எனவும் தெரிவித்தார்.

ரஜினிகாந்த் ஆளுநருடன் சந்தித்தது குறித்த கேள்விக்கு அதனை ஒன்றும் சீரியசாக எடுக்க வேண்டாம் என்றார். இந்நிகழ்வில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் மோகன் குமார் முன்னிலை வகித்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 10 Aug 2022 4:44 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  3. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  4. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  5. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  6. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  7. வீடியோ
    வரிசைகட்டி டூர் அடிக்கும் அரசியல்வாதிகள் |மலைப்பிரதேசங்களில் கூத்து...
  8. வீடியோ
    காங்கிரஸ் இந்துக்களின் சொத்தை பறித்து சிறுபான்மையினருக்கு கொடுக்க சதி...
  9. தமிழ்நாடு
    தருமபுரம் ஆதீனம் வழக்கு: பாஜக நிர்வாகியின் ஜாமீன் மனு தள்ளுபடி
  10. சிதம்பரம்
    சிதம்பரம் கோயிலில் பிரம்மோற்சவம் நடத்த தடை கோரிய வழக்கு சிறப்பு...