விரால் மீன் வளர்ப்பிற்கு இடுபொருள் மானியம்: அரியலூர் கலெக்டர் அறிவிப்பு
அரியலூர் மாவட்டத்தில் விரால் மீன்வளர்ப்பினை ஊக்குவித்திட இடுபொருள் மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் அறிவித்துள்ளார்.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்ட கலெக்டர் பெ.ரமணசரஸ்வதி விடுத்துள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தேசிய வேளான் அபிவிருத்தி திட்டம் 2020-21ன்கீழ், விரால் மீன்வளர்ப்பினை ஊக்குவித்திட இடுபொருள் மானியம் வழங்குதல் திட்டத்தினை செயல்படுத்திட தமிழ்நாட்டில் விரால் மீன்வளர்ப்பில் ஆர்வமுள்ள பயனாளிகளால் ஏற்கனவே 1000 ச.மீ. பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பண்ணைகுட்டைகளை புனரமைத்திடவும் மற்றும் விரால் மீன்வளர்ப்பு செய்திட ஆகும் உள்ளீட்டு செலவினம் ஆக மொத்தம் ரூ.75000/-ல் 40 சதவீதம் மானியமாக ஒரு அலகிற்கு ரூ.30,000/- மானியமாக வழங்கிட ஒப்பளிப்பு பெறப்பட்டுள்ளது.
எனவே இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் அரியலூர் மாவட்ட உதவி இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, அறை எண்.234, இரண்டாவது மேல் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், அரியலூர்.621 704, தொலைபேசி எண்.04329 - 228699 தொடர்பு கொள்ளவும். மேலும் இதற்குரிய விண்ணப்பங்கள் மற்றும் கூடுதல் விவரங்களை www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.