/* */

அரியலூரில் வாகன முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு

சாலை பாதுகாப்பு விதிகள் மதித்து வாகனம் இயக்க வேண்டும் என போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

HIGHLIGHTS

அரியலூரில் வாகன முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி விழிப்புணர்வு
X

லாரியின் விளக்கு முகப்பில் போலீசார் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டினர்.

அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா உத்தரவின்படி அரியலூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறையினர், அரியலூர் மாவட்டம் செந்துறை ரவுண்டானா அருகே கனரக வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டினர்.

இரவு நேரங்களில் எதிரே வருபவர்களுக்கு கண்கூச கூடாது என்பதற்காக இவ்வாறு ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது.

மேலும் கனரக வாகன ஓட்டிகளுக்கு செல்போன் பேசிக்கொண்டு வாகனம் இயக்கக்கூடாது,குடிபோதையில் வாகனம் இயக்கக்கூடாது, சீட் பெல்ட் அணிந்து வாகனம் இயக்க வேண்டும்,பாதசாரிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கக் கூடாது,போக்குவரத்து சமிக்கைகள் சாலை பாதுகாப்பு விதிகள் மதித்து வாகனம் இயக்க வேண்டும் என போக்குவரத்து காவல்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Updated On: 7 Oct 2021 7:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  3. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  4. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  5. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  6. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  7. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  8. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்