/* */

திருமானூர் அருகே கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது

கண்டராதித்தம் மேட்டுத்தெரு கிராமத்தில் மாரியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

திருமானூர் அருகே கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருடியவர் கைது
X

திருமானூர் அருகே கண்டராதித்தம் கிராமத்தில் உடைக்கப்பட்ட கோயில் உண்டியல்.

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்டராதித்தம் மேட்டுத்தெரு கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த பகுதியில் மழை பெய்த நிலையில் மாரியம்மன் கோவிலில் நீண்ட நேரமாக சத்தம் கேட்டுள்ளது.

இதனால் சந்தேகமடைந்த கோவிலுக்கு அருகில் இருந்தவர்கள், அங்கு சென்று பார்த்தபோது ஒருவர் உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிக்கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டனர். இதையடுத்து கோவிலுக்கு அருகில் இருந்தவர்கள் வருவதை கண்ட நபர் தப்பிக்க முயற்சித்து, அருகில் இருந்த கரும்பு வயலில் பதுங்கினார். பொதுமக்கள் நீண்ட நேரம் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து கரும்பு வயலுக்கு வெளியே இளைஞர்கள் பதுங்கியிருந்தனர். சிறிது நேரம் கழித்து கரும்பு வயலில் இருந்து வெளியே வந்த நபரை அப்பகுதியில் பதுங்கி இருந்த இளைஞர்கள் மடக்கி பிடித்தனர்.

அவரிடம் இருந்து ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லறை காசுகளை மீட்டனர். அதில் சுமார் ரூ.50 ஆயிரம் இருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் இது குறித்து கிராம மக்கள் திருமானூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம், அந்த நபரை ஒப்படைத்தனர்.

அவரை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தை சேர்ந்த பச்சமுத்துவின் மகன் ரமேஷ் என்பது தெரியவந்தது.

இது குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரமேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 12 Oct 2021 5:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    அன்னையை போற்றுவோம்..! நேர்காணும் கடவுள்..!
  3. கல்வி
    ஆன்லைனில் கல்லூரி சேர்க்கை: மாணவர்களுக்கான விழிப்புணர்வு
  4. உலகம்
    பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பெரும் கலவரம்! காவல்துறையினருடன் ...
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி உலகநாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்
  6. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு
  7. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  8. வீடியோ
    🔴LIVE : 16 ஆண்டுகளுக்கு பின் come back Action Hero-வாக நடித்து...
  9. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  10. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்