/* */

கூடுதல் பேருந்து இயக்க கோரி பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

அரியலூர் மாவட்டம் திருமானூரில் காலை, மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க கோரி பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்.

HIGHLIGHTS

கூடுதல் பேருந்து இயக்க கோரி பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
X

திருமானூரில் காலை, மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கக் கோரி பள்ளி, கல்லூரி மாணவர்கள் பேருந்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.


அரியலூர் மாவட்டம் திருமானூரில், காலை,மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கக்கோரி பள்ளி,கல்லூரி மாணவர்கள் பேருந்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்டனர்.

கடந்த 4 நாட்களாக விடுமுறை என்பதால், சொந்த ஊர் திரும்பியிருந்த பள்ளி,கல்லூரி மாணவர்கள், அலுவலகங்களில் வேலை செய்வோர் என அனைவரும் இன்று காலை பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு திரும்பினர். இதனால் அனைத்து பேருந்துகளும் இன்று காலை கூட்டமாக காணப்பட்டது. இதனால் சில பேருந்துகள் பேருந்து நிறுத்தங்களில் நிற்கமலேயே சென்றது. சில பேருந்துகள் பேருந்து நிறுத்தத்தை தாண்டி சிறிது தூரம் சென்று நின்று சென்றது.

இதனால் ஆத்திரமடைந்த மாணவ,மாணவிகள் அரியலூர் மாவட்டம் திருமானூர் பேருந்து நிலையத்தில், அவ்வழியே சென்ற அரசு பேருந்தை சிறைபிடித்து நிறுத்தத்தில் ஏன் நிற்காமல் செல்கிறீா் எனவும், மாணவர்கள் பள்ளி,கல்லூரி சென்று வரும் வகையில் காலை, மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். தகவலறிந்து வந்த திருமானூர் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து மாணவ,மாணவிகள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

Updated On: 18 April 2022 1:21 PM GMT

Related News

Latest News

  1. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே பாம்பு கடித்து தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி...
  2. கோவை மாநகர்
    யானை வழித்தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற வேண்டும் : விவசாயிகள்...
  3. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு ||...
  4. ஆன்மீகம்
    தெய்வத்திடம் என்ன கேட்க வேண்டும்?
  5. கோவை மாநகர்
    ஆனைமலையில் குடும்பத்துடன் உறங்கும் காட்டு யானைகளின் புகைப்படம் வைரல்
  6. லைஃப்ஸ்டைல்
    அடே..நண்பா.. வாடா பிறந்தநாள் கொண்டாடலாம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வேலைச் சோர்வில் இருந்து மீண்டு வர 9 வழிகள்
  8. கோவை மாநகர்
    நொய்யல் ஆற்றில் நுரையுடன் வெளியேறும் வெள்ள நீர் ; நோய் தொற்று பரவும்...
  9. தேனி
    தேனி அல்லிநகரம் நகராட்சியில் குவிந்து கிடக்கும் குப்பைகள்!
  10. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்