சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு ஆயுள் தண்டனை
உடையார்பாளையம் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு சாகும்வரை ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
HIGHLIGHTS
உடையார்பாளையம் அருகே 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் சித்திரக்கார தெருவை சேர்ந்தவர் குப்புசாமி(80). இவர் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி அப்பகுதியில் விளையாடிக்கொண்டிருந்த 9வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது குறித்து உடையார்பாளையம் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து குப்புசாமியை கைது செய்தனர். இச்சம்பவம் குறித்த வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்தன், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் குப்புசாமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.