பொதுமக்களின் மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கிய எம்எல்ஏ கண்ணன்
Petition Status - "பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெறுதல்" நிகழ்வில் பெறப்பட்ட மனுக்களை, மாவட்ட கலெக்டரிடம் எம்எல்ஏ கண்ணன் வழங்கினார்.
HIGHLIGHTS
Petition Status -அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில், "பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெறுதல்" நிகழ்வில், பெறப்பட்ட மனுக்களை, மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதியிடம், சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் வழங்கினார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுமக்களை நேரில் சந்தித்து, அவர்களிடம் இருந்து பொதுநலன் மற்றும் நலன் சார்ந்த கோரிக்கை மனுக்களை நேரில் பெற்று, மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு செல்ல அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து தா.பலூர், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் ஆகிய மூன்று ஊராட்சி ஒன்றியங்களிலும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.
அந்நிகழ்ச்சிகள் பெற்றுக் கொண்ட மனுக்களை இன்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதியை நேரில் சந்தித்து, பொதுமக்கள் வழங்கிய மனுக்களை வழங்கினார். மேலும் பணிகள் மீது உரிய ஆய்வு செய்து, கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு ஜெயங்கொண்ட எம்எல்ஏ கண்ணன் கேட்டுக்கொண்டார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2