/* */

700 தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் சிவசங்கர்

அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய 700 தொழிலாளர்களுக்கு ரூ.10லட்சம் மதிப்பிலான நலத்திட்டஉதவிகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

HIGHLIGHTS

700 தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் சிவசங்கர்
X

தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு பெற்ற 700 தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வழங்கினார்.


அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு பெற்ற 700 தொழிலாளர்களுக்கு ரூ.10 லட்சத்து 2 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் ரமண சரஸ்வதி மற்றும் அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் முன்னிலை வகித்தனர்.

அதன் தொடர்ச்சியாக அரியலூர் மாவட்டத்தில் 18 அமைப்புசாரா தொழிலாளர் நலவாரியங்களில் பதிவு செய்துள்ள 472 தொழிலாளர்களுக்கு மாதந்திர ஓய்வூதியமாக ரூ.6,35,000/-ம், 207 தொழிலாளர்களுக்கு கல்வி உதவி தொகையாக ரூ.4,06,200/-ம், 8 தொழிலாளர்களுக்கு இயற்கை மரண உதவி தொகையாக ரூ.2,00,000/-ம், 12 தொழிலாளர்களுக்கு திருமண உதவி தொகையாக ரூ.58,000/-ம் மற்றும் 1 தொழிலாளிக்கு மகப்பேறு உதவி தொகையாக ரூ.3,000/-ம் என மொத்தம் 700 தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவியாக 13,02,200/- வழங்கப்படுகிறது.

எனவே, தொழிலாளர்கள் அனைவரும் அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு தங்கள் வாழ்வினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் சந்திரசேகர், தொழிலாளர் உதவி ஆணையர் விமலா, கண்காணிப்பாளர் நூருல்லா அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




Updated On: 30 July 2021 9:26 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : பள்ளிக்கரணை ஆணவக்கொலை வழக்கு பற்றி மூத்த வழக்குரைஞர்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  3. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  4. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  5. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  6. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  8. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  9. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  10. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு