அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் பாதிப்பு இல்லை
அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் ஒருவர் கூட பாதிப்பு அடையவில்லை.
HIGHLIGHTS
அரியலூர் மாவட்டத்தில் இன்று கொரோனாவால் பாதிப்பு இல்லை. ஒருவர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளார். மருத்துமனைகளில் 13 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்றுவரை 16,945 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவில் இருந்து 16,668 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றிற்கு இதுவரை 264 பேர் உயிரிழந்துள்ளனர்.
மருத்துவமனைகளில் இன்று எடுக்கப்பட்ட மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 319 பேர். இதுவரை 3,47,146 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் நோய்தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் 16,945 பேர், நோய்தொற்று இல்லாதவர்கள் 3,30,201 பேர்.
அரியலூர் மாவட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் 13,629. இதில் பரிசோதனை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 6,61,339. அதில் மாதிரி பரிசோதனை எடுக்கப்பட்டவர்கள் 47,154 பேர். முகாம்களில் நடத்தப்பட்ட பரிசோதனைனகளில் நோய்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்கள் 1,889 பேர். நோய்தொற்று இல்லாதவர்கள் 45,160 பேர். பரிசோதனை முடிவு வரவேண்டியவர்கள் 105 பேர்.
இன்று கொரோனா முன்தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்கள் 2630 பேர். இதில் முதல் தடுப்பூசியை இன்று 330 பேர் போட்டுக் கொண்டுள்ளனர். 2ம் தடுப்பூசியை இன்று 2300 பேர் போட்டுக்கொண்டுள்ளனர்.