/* */

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, காங்கிரஸ் கட்சி கையெழுத்து இயக்கம்

பெட்ரோல் ,டீசல் விலை உயர்வை கண்டித்து, காங்கிரஸ் கட்சி கையெழுத்து இயக்கம் நடத்தியது.

HIGHLIGHTS

பெட்ரோல், டீசல் விலை உயர்வு, காங்கிரஸ் கட்சி கையெழுத்து இயக்கம்
X
அரியலூரில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக  பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி சார்பாக பெட்ரோல் பங்கு முன்பு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தோழர்கள் கையெழுத்து இயக்கம் நடத்தினர்.

அரியலூர் நகர காங்கிரஸ் சார்பாக நகர தலைவர் சந்திரசேகர் தலைமையில் கையெழுத்து இயக்கம் துவங்கப்பட்டது. பெட்ரோல், டீசல் விலைஉயர்வால், அத்தியாவசிய பொருள்களின் விலையும் உயர்கின்றது.

இதனால் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே மத்தியஅரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்ககோரி பொதுமக்களிடம் கையெமுத்து பெறப்பட்டது.

இதில் மாவட்ட செயலாளர் அமானுல்லா, காங்கிரஸ் தொழிற்சங்க செயலாளர் ராஜா, வட்டாரத் தலைவர் சீனிவாசன், மாவட்ட செயலாளர் பால சிவக்குமார், நகர துணைத்தலைவர் செந்தில்வேல், சிவாஜி ரசிகர்மன்றம் ரவிச்சந்திரன், இளைஞர் காங்கிரஸ் வார்டு பொறுப்பாளர் ஆண்டனிதாஸ், நகர செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார், தொழிற்சங்க உறுப்பினர் நடராஜன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 8 July 2021 2:12 PM GMT

Related News

Latest News

  1. அருப்புக்கோட்டை
    வெடி விபத்து: மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் விசாரணை
  2. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் கொண்டாடும் குதூகல நாள்..! வாழ்த்துங்க..!
  3. காஞ்சிபுரம்
    மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் செவிலியர் தின விழா
  4. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  5. ஈரோடு
    ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சி: சொல்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்
  6. வீடியோ
    விளைவு மிக பயங்கரமாக இருக்கும் !#annamalai #annamalaibjp #bjp...
  7. நாமக்கல்
    ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகளை ஆட்சியர்...
  8. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் மழை நீர் வடிகால் அடைப்பு கண்டித்து சாலை மறியல்
  9. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  10. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்