/* */

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை 200 நாட்களாக்க கோரி கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்

அரியலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஊரக வேலைவாய்ப்புதிட்டத்தை 200நாட்களாக்க கோரி கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை 200 நாட்களாக்க கோரி கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.




அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச்செயலாளர் உலகநாதன் மற்றும் மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச்செயலாளர் இளங்கோவன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை 200 நாட்களாக்க வேண்டும், ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை நகரங்களில் செயல்படுத்த வேண்டும், ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கு வழங்கப்படும் ஊதியத்தை 600ரூபாயாக உயர்த்தி வழங்கவேண்டும், கிராமப்புறங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று இடத்தில் பட்டா வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Updated On: 1 Aug 2022 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...