/* */

மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களை வழங்கிய மாவட்ட கலெக்டர்

அரியலூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.

HIGHLIGHTS

மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களை  வழங்கிய மாவட்ட கலெக்டர்
X

மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களை அரியலூர் மாவட்ட கலெக்டர் வழங்கினார்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் கால்களை இழந்த 70 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்களை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயங்கள் (கால்கள் மட்டும்) வழங்கிட தகுதியான மாற்றுத்திறனாளிகளுக்கான அளவீடு முகாம் அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அக்டோபர் 6 அன்று நடைபெற்றது. இம்முகாம் மூலமாக அரியலூர் மாவட்டத்தில் உள்ள கால்கள் துண்டிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால்கள் வழங்கிடும் பொருட்டு Freedom Trust - சென்னை நிறுவனத்தின் மூலம் அளவீடு செய்யும் பணிகள் நடைபெற்றது.

அன்றைய முகாமில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான செயற்கை கால்கள் செய்வதற்கான அளவீடுகள் மேற்கொள்ளப்பட்டது. அதனைத்தொடர்ந்து, அளவீடு பணிகள் நிறைவடைந்து, மாற்றுத்திறனாளிகளுக்கு உண்டான செயற்கை கால்கள் வந்ததையடுத்து, 70 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.10 இலட்சம் மதிப்பீட்டிலான 72 செயற்கை கால்களை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி வழங்கினார்.

மேலும், செயற்கை கால்கள் பெற்றுக்கொண்ட நபர்கள் அனைவருக்கும் Freedom Trust - சென்னை பணியாளர்கள் மூலமாக செயற்கை கால்கள் சரியான அளவில் பொருத்தப்பட்டு, அவர்களுக்கு நடைப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு நடப்பதில் ஏதேனும் பிரச்சனை இருக்கும் பட்சத்தில் இந்நிறுவனத்தின் மூலமாக உரிய பயிற்சிகளும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜெய்னுலாப்தீன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், முடநீக்கியல் வல்லுநர் ராமன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 20 Nov 2021 2:14 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்