/* */

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் உதவ எண்கள் அறிவிப்பு

அரியலூர் மாவட்ட காவல் துறை சார்பில் பொதுமக்களுக்காக உதவ பாதுகாப்பு சம்பந்தமான அரசின் உதவி எண்களை வெளியிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

அரியலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு 24 மணி நேரமும் உதவ எண்கள் அறிவிப்பு
X

அரியலூர் மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பொதுமக்கள் தங்களின் பாதுகாப்புக்காக அரசின் சார்பில் உதவி எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி குழந்தைகளுக்கான குற்றச்செயல் தடுப்பு மற்றும் உதவிகள் கூறுவதற்காக 1098 என்ற எண்ணும், மகளிர்க்கான பிரச்சினைகளை தீர்ப்பதற்காக 181 என்ற எண்ணும், காவல் துறை சம்பந்தமான உதவிகளைப் பெறுவதற்காக 100 என்ற எண்ணும், முதியோருக்கான உதவிகள் மற்றும் பாதுகாப்பு சம்பந்தமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள 14567 என்ற எண்ணும், இணையவழி குற்றங்களுக்காக தகவல்கள் தெரிவித்து நிவாரணம் பெறுவதற்காக 1930 என்ற எண்ணும் பொதுமக்களின் உபயோகத்திற்காக வழங்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட எண்ணில் அனைத்து நாட்களிலும் 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு பொது மக்கள் உதவிகளைப் பெறலாம் என்று அரியலூர் மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

Updated On: 24 April 2022 7:37 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா
  2. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  3. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  4. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  5. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  6. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  7. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  8. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது