/* */

பாகுபாடு காட்டும் உறவுகள் வேண்டாமே..!

Partiality Hurts Quotes in Tamil-பாகுபாடு என்பது உறவுகளை சீர்கெடுக்கும் தீய விளைவு. அதை இந்த சமூகத்தில் பரவி விடாமல் தடுப்பதும் நமது கடமை.

HIGHLIGHTS

Partiality Hurts Quotes in Tamil
X

Partiality Hurts Quotes in Tamil

Partiality Hurts Quotes in Tamil

பாரபட்ஷம் என்பது வெறுப்பினால் ஏற்படும் விளைவாகும். அது ஒரு விஷ மரமாகும். உறவுகளைக்கொல்லும் விஷம். அதை வளரவிட்டால் செடி மரமாகி, காய் காய்த்து, பழமாகி மீண்டும் விதையாகி இன்னொரு விஷ மரத்தை வளர்க்கும். இது சமூகத்தில் வேறுபாட்டை உருவாக்கலாம்.

  • கண்மூடித் தனமாக ஒருவரை நேசித்து விட்டால், அவர்கள் சொல்லும் பொய்கள் கூட, உண்மையாகவே தெரிகிறது..
  • முட்டாள் பட்டம் கிடைப்பதற்கு அறிவு அவசியமில்லை. அதிக அன்போடு இருந்தாலே கிடைத்து விடும்..
  • அலட்சியங்களை சகித்துக் கொள்வதை விட, நிராகரிப்பை ஏற்றுக் கொள்வது எவ்வளவோ மேல்
  • பணம் புகழ் என்று எவ்வளவு இருந்தாலும், பெரியவர்களை மதிக்க தெரியாதவன் பிணத்திற்கு சமம்..
  • பொய்களை எளிதாக நம்பும் இந்த உலகம்... உண்மையை நிரூபிக்க ஆதாரம் கேட்கும்..
  • உண்மையான காதலனுக்கு கிடைத்த பரிசு, துரோகி என்ற பெயர் மட்டுமே..
  • கட்டாயத்தினால் காட்டப்படும் அன்பு, கண்டிப்பாக நிலைக்காது..
  • ஒருவரை மன்னித்துவிடும் அளவிற்கு நல்லவராக இருங்கள்; ஆனால் அவரை மீண்டும் நம்புமளவிற்கு முட்டாளாகிவிடாதீர்கள்...
  • நாம் சில நேரங்களில் காட்டும் உண்மையான அன்பு போலியாக நேசிப்பவர்களை காட்டி கொடுத்துவிடுகிறது..
  • அளவோடு பழகணும், எல்லைகள் தெரிந்திருக்கணும் என்பதெல்லாம் தெருவில் வீசப்பட்ட பின்னர்தான் அறிவுக்கு தெரியவரும்..
  • தாகம் தீரும் வரை தான் நீருக்கு மதிப்பு இருக்கும். சில உறவுகளுக்கு தேவை இருக்கும் வரை தான் பாசம் இருக்கும்.
  • சிரிப்பதற்கு கற்றுக் கொள்ளுங்கள், அழுவதற்கு உடன் இருப்பவர்கள் கற்றுக் கொடுப்பார்கள்..
  • எல்லா நேரத்திலும் நமக்கு புடிச்சவங்க ஒரே மாதிரி இருக்க மாட்டாங்க. நமக்குதான் எவ்வளவு பட்டாலும் புரியறது இல்ல..
  • நிச்சயம் இல்லா ஒன்றின் மேல், அதீத நேசம் வைத்துவிடாதே..! நிரந்தரமான நினைவுகளைக் கொடுத்துவிட்டு, உன் இரவுகளை களவாடிச் சென்றுவிடும்..
  • இங்கு பலர் புரிந்து கொள்ளாமல் இருப்பது ஒன்றுதான்..அவர்கள் செய்தால் சரி, நாம் செய்தால் தவறு..
  • நண்பனையும் நேசி, எதிரியையும் நேசி. உன் வெற்றிக்கு துணை நிற்பவன் நண்பன். உன் வெற்றிக்கு காரணமானவன் உன் எதிரி.
  • நூறு நண்பர்கள் தரும் ஊக்கத்தை ஒரே ஒரு எதிரி தருவான் நாம் வளர.
  • பிடிக்கவில்லை என்றால் நண்பனுக்கு எதிரியாய் கூட இருந்து விடு. ஆனால் துரோகியாய் மட்டும்

இருந்து விடாதே.

  • நண்பனை நேசிப்பது போல் எதிரியையும் நேசிக்க பழகுங்கள். ஏன் என்றால் நண்பன் வெற்றிக்கு

துணை நிற்பான் எதிரி வெற்றிக்கு காரணமாக இருப்பான்.

  • உங்கள் வெறுப்புடன் அல்ல.. உங்கள் ஞானத்தால் எதிரிகளை நசுக்குங்கள்.
  • நிறைய எதிரிகள் இருக்கலாம் ஆனால் யாரையும் நிரந்தரமான எதிரியாக நினைத்து கொள்ளாதே.
  • நம்ம இல்லாம சந்தோஷமா இருப்பாங்கன்னா... விலகியும் போகலாம், விட்டும் போகலாம். தப்பே இல்ல. போகட்டும் விடுங்க.
  • நேரமில்லாத நேரத்திலும் உன்னுடன் பேசினேன்..! நீ நேரம் போவதற்காக, பேசுகிறாய் என்று கொஞ்சம் கூட தெரியாமல்..!
  • உன் அலைபேசி கூட அறிந்துவிட்டது, நீ எந்தன் தொடர்பு எல்லைக்கு அப்பால் சென்றுவிட்டாய் என்று..
  • பசி அடங்கிய பின் கிடைக்கும் உணவும், மனம் வெறுத்த பின் கிடைக்கும் அன்பும் பயனற்றது.
  • நினைவுகள் கண்ணில் நீராய், மனம் முழுதும் இங்கே, நான் போகிறேன் எங்கோ..
  • நீ கொடுத்த வலிகளும் நன்மைக்கு தான்..! அவையே உணர்த்துகின்றன, நான் உயிரோடு உள்ளதை..!


  • வாயில்லாமல் போனால் வார்த்தையில்லை பெண்ணே..! நீயில்லாமல் போனால் வாழ்க்கையில்லை கண்ணே..! முள்ளோடு தான் முத்தங்களா? சொல் சொல்..
  • கனவும் கற்பனையும் நீ தந்தது, வலியும் வார்த்தைகளும் நான் கொண்டது..
  • பிறர் வலியை புரிந்துக்கொள்ள முடிகிறது.. என் வலியை தான் புரிய வைக்க முடியவில்லை..
  • என் காயங்களை என் கண்கள் கூறும் போதெல்லாம் அன்போடு ஏற்கும் என் தலையணைக்கு நன்றி பாடுவேன். என் காயங்கள் "தீரும் வரை அல்ல..! என் காலம் தீரும் வரை..
  • எல்லாமே சில காலம் தான்..! அது உறவாக இருந்தாலும் சரி, உயிராக இருந்தாலும் சரி..
  • ஏனோ காதல் பிரிந்தது, இணையாத தண்டவாளம் போல, வாழ்க்கை கண்ணிர் பயணத்தில்..
  • உன்னோடு நான் இருந்த நிமிடங்களை ரசித்தபடியே, மீண்டும் அந்த நிமிடங்கள் வருமா என்ற ஏக்கங்களுடன் நானும் என் தனிமையும்..
  • இப்போதெல்லாம் குப்பைக் காகிதங்களை விட, அதிகமாக தூக்கி வீசப்படுகின்றன, காதல் இதயங்கள்..
  • தன்மானம் இழந்து பிறரின் அன்புக்கு ஏங்கினால், அதற்கு கிடைக்கும் வெகுமானம் வலி நிறைந்த அவமானம் மட்டுமே..
  • வந்த தூக்கத்தை துறத்தி விட்டு, வராத உன்னை பார்க்கிறேன் அறை சுவற்றில் சுவரோவியமாக உன் முகம்..
  • கேட்டால் பிரிவு வந்துவிடும். சொன்னால் மனம் குழப்பம் ஆகிவிடும்! சில உறவுகளின் நிலை...
  • நேரமில்லாத நேரத்திலும், உன்னுடன் பேசினேன்..! நேரம் போவதற்காக பேசுகிறாய் என்று கொஞ்சம் கூட தெரியாமல்..
  • அன்பின் பூக்களுக்கு தான் விதையிட்டேன்.. அதில் பிரிவின் முட்கள் எப்படி முளைத்ததென்று இப்போது வரை விளங்கவேயில்லை..
  • வேண்டும் என்று விரும்பிய ஒன்றை, வேறு ஒருவர் கைகளில் பார்க்கும் பொழுது வேதனை சற்று அதிகம் தான்..
  • யார் முதலில் பேசுவது என்ற தலைக்கனத்தில், பலர் பேசாமலே பிரிந்து விடுகின்றனர்..
  • விட்டுச் செல்லும் அவளுக்கே, வாழ்க்கை கிடைக்கும் போது, விட்டுக் கொடுக்கும் எனக்கு கிடைக்காதா என்ன?
  • தொலைக்கவில்லை.. இருந்தும் தேடுகிறேன், நேற்று இருந்த உன்னையும் என்னையும்..

காதல் இல்லாத அவளும், அவள் இல்லாத நானும் முழுமையடையாத வாக்கியங்கள்..

  • மின்மினிப் பூச்சியாய் வந்தவள், கானல் நீராய் மறைந்தது ஏனோ?
  • அவள் சென்று விடுவாள் என தெரிந்திருந்தால், என் வாழ்நாள் முழுவதும் இருட்டிலேயே நீந்தி கழித்திருந்துப்பேன்..
  • நினைவில் இருந்து நீங்கிவிடு. கனவில் வருவதை நிறுத்திவிடு! கண்கள் கொஞ்சம் காய்ந்தே இருக்கட்டும்! கண்ணீர் வராமலே காலங்கள் கழியட்டும்..!
  • பழகுவது தவறில்லை, அளவுக்கு அதிகமாக பாசம் வைப்பது தான் தவறு..!


  • அருகில் இருப்பவர் அருமை தெரிவதில்லை, அவர்கள் அருகில் இருக்கும் வரை..!
  • எவரும் இல்லை என்றது இதயம். இருப்பினும், அவளும் இல்லை என்றது மனம்..
  • கண் மூடி நான் காணும் கனவே, கண் விழிக்க நான் மறுக்கக் காரணம்..
  • சிரிப்பதால் வலியை மறந்து விட்டேன் என்று அர்த்தம் அல்ல! மறைத்து விட்டேன் அவ்வளவு தான்..
  • நாம் நேசிக்கும் ஒருவர் நம்மை காயப்படுத்தும் போது, ஏற்படும் வலி மரணத்திலும் கொடியது..
  • எல்லாம் இருந்தும், ஏதும் இல்லாதவள் போல் உணர்கிறேன். நீ என்னுடன் இருந்தும், ஏதோ ஏக்கம்! இது நிரந்தரம் தானா என்று விடையில்லை. விடைசொல்ல நீயும் இல்லை..!
  • மரணப் படுக்கையில் தலைவைத்து உன், விழி நோக்க காத்திருக்கும் என் மனதின் வலி உன் இதயத்தை சுடவில்லையா? மடிகிறேன் உன் நினைவுகளுடன், மறுஜென்மம் வேண்டாம் என்று..!
  • நம்மை ஒருவர் காயப்படுத்துவது வேதனை..! அதையே நியாப்படுத்துவது நரக வேதனை..
  • உன்னை மறக்கும் முயற்சியில் உன்னை விட்டு தொலைவில் வந்தாலும், தொடர்ந்து வந்து தொல்லை கொடுக்கிறாய், தினமும் கனவில் நீ..
  • அன்று கால்கள் தடுமாறவே உன் கைகள் வந்து சேர்ந்தேன்! இன்று உள்ளம் தடுமாறவே நீ எங்கே என தேடுகிறேன்..
  • அதிகமாக நேசித்த பொருள் நமக்கு சொந்தமாகவில்லை என்ற வருத்தம், நேசித்த அந்த பொருளை அதிகமாக வெறுக்க வைத்துவிடும்..
  • நான் இல்லையெனில் உனக்காக காத்திருக்க பலர் இருப்பார்கள்! ஆனால், நீ இல்லையெனில் எனக்காக காத்திருப்பது மரணம் மட்டுமே..!
  • யாரால் இன்று அதிகமாக நேசிக்கப்படுகிறோமோ, அவர்களால் ஒருநாள் அதைவிட அதிகமாக வெறுக்கப்படுவோம்..!
  • மதம் கொண்டதால் யானை மனிதனை கொன்றது... மதம் கொண்டதால் நம் காதலை மனிதன் கொன்றான்..


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Updated On: 13 March 2024 10:24 AM GMT

Related News

Latest News

  1. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...
  2. இந்தியா
    சிஏஏ திட்டதின் கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்
  3. அரசியல்
    ஐஎன்டிஐஏ ஆட்சிக்கு வந்தால் வெளியில் இருந்து ஆதரவு: மம்தா அறிவிப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    அப்பா அம்மாவுக்கு கல்யாண நாள் வாழ்த்து- இப்படிக்கு பிள்ளைகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!
  6. லைஃப்ஸ்டைல்
    மல்லிகையே மல்லிகையே தூதாகப் போ - என் காதல் தேவதைக்கு வாழ்த்துகளை...
  7. குமாரபாளையம்
    ஜே.கே.கே. நடராஜா கல்லூரியில் நான் முதல்வன், கல்லூரி கனவு திட்ட முகாம்...
  8. லைஃப்ஸ்டைல்
    என்னுள் நிறைந்தவளுக்கு இதயபூர்வமான பிறந்த நாள் வாழ்த்துகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    மனைவிக்கான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!