புதிய நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் செங்கோல்: பிரதமருக்கு நாமக்கல் பாஜக பாராட்டு

தமிழகத்தில் இருந்து கொண்டுசெல்லப்பட்ட செங்கோலை, புதிய பார்லிமெண்டில் நிறுவிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து, நாமக்கல் நகர பாஜக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-05-28 07:45 GMT

நாமக்கல் நகர பாஜக செயற்குழு கூட்டத்தில், நகரத் தலைவர் சரவணன் பேசினார்.

தமிழகத்தில் இருந்து கொண்டுசெல்லப்பட்ட செங்கோலை, புதிய பார்லிமெண்டில் நிறுவிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து, நாமக்கல் நகர பாஜக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல் நகர பாஜக செயற்குழு கூட்டம், தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொதுச் செயலாளர் சேதுராமன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தமிழகத்தில் இருந்து கொண்டுசெல்ப்பட்டு 75 ஆண்டுகளாக, அலகாபாத் அருங்காட்சியகத்தில் இருந்த செங்கோலை, புதிய பார்லிமெண்ட் வளாகத்தில், சபாநாயகர் இருக்கை அருகில் நிறுவிய, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நாமக்கல்லில் உள்ள புராதன சின்னமான மலைக்கோட்டை பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். அங்கு போதிய பாதுகாப்பு இல்லாததால், திருட்டு மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் நடைபெறுகிறது. எனவே அங்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். நாமக்கல் புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட உள்ள வழியில் ரிங்ரோடு அமைப்பு பணிகள் துவக்கப்படாமல் உள்ளது.

பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக ரிங் ரோடு அமைக்க வேண்டும். நாமக்கல் நகரில் அடிக்கடி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமக்கல் போதுப்பட்டி முதல் நல்லிபாளையம் வரை ரோடு ஓரங்களில் கோழி மற்றும் மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

இதை தடுக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கொண்டிசெட்டிப்பட்டி குளத்தில் கழிவுநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட கமலாலயக் குளத்திற்கு பெயர்பலகை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். 

Tags:    

Similar News