டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைப்பு!

டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைப்பட்டுள்ளது.

Update: 2024-04-29 08:15 GMT

பைல் படம் : டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6 தனிப்படைகள் அமைப்பு

நாமக்கல்,

டாஸ்மாக் விற்பனையாளரை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க போலீஸ் டிஎஸ்பி தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் காந்திபுரம் அண்ணா நகரை சேர்ந்தவர் பணரோஜா (46), இவர் புதன்சந்தை அருகே நைனாமலை ரோட்டில் உள்ள சாலையூர் டாஸ்மாக் மதுபானக் கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 26ம் தேதி இரவு இவர் தன்னுடன் பணிபுரியும் ஊழியர்களான உதயக்குமார், கோகிலன் மற்றும் ரவிக்குமார் (43) ஆகியோருடன் டூ வீலரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இதில் பணரோஜா, உதயக்குமார் ஒரு வாகனத்திலும் மற்ற இருவரும் வேறொரு வாகனத்திலும் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் கடையில் இருந்து சிறிது தூரம் சென்றதும், பணரோஜா, உதயக்குமார் சென்ற பைக்கை மர்மநபர்கள் தடுத்து நிறுத்தி அரிவாளால் அவரை வெட்டி கீழே தள்ளிவிட்டு, அவரிடம் இருந்து ரூ.1,200 ரொக்கம், 2 செல்போன்களை திருடிக்கொண்டு தப்பிச் சென்று தலைமறைவாகிவிட்டனர்.

இந்த சம்பவத்தில் பணரோஜா வலது கை துண்டாகியது. மேலும், உதயக்குமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். இருவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடபாக சேந்தமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மாவட்ட போலீஸ் எஸ்பி ராஜேஷ்கண்ணன் உத்தரவின்பேரில், நாமக்கல் போலீஸ் டிஎஸ்பி ஆனந்தராஜ் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தலைமறைவான மர்மநபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News