தேசிய பெண் குழந்தைகள் தினம்: மாணவியருக்கு கலெக்டர் வாழ்த்து

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாணவியருக்கு நாமக்கல் கலெக்டர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Update: 2023-01-25 04:00 GMT

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, வண்ணப்படம் அச்சிடப்பட்ட சேமிப்பு கணக்கு புத்தகத்தை நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டார்.

தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி பெண் கல்வியின் முக்கியத்துவம், குழந்தை திருமணம் தடுத்தல் ஆகியவை தொடர்பாக இரு மாணவிகளுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வாழ்த்துமடல் வழங்கினார்.

தேசிய பெண் குழந்தைகள் தினம் இந்தியாவில் ஜனவரி 24ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் பெண் கல்வி, ஊட்டச்சத்து, குழந்தை திருமணம், சட்ட உரிமைகள் மற்றும் மருத்துவப் பாதுகாப்பு போன்றவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இரண்டு மாணவியருக்கு மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயோ சிங் வாழ்த்துமடல் வழங்கினார். மேலும், அஞ்சலக சேமிப்பு கணக்கு புத்தகத்தின் மூலம் கிராமப்புற மக்களுக்கு பெண் குழந்தையின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, குழந்தை திருமணம் தடுத்தலுக்கான வண்ணப்படம் அச்சிடப்பட்ட சேமிப்பு கணக்கு புத்தகத்தையும் கலெக்டர் வெளியிட்டு பெண் குழந்தைகளுக்கு வழங்கிõனர்.

மாவட்ட சமூக நல அலுவலர் கீதா, அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News