ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!

நாமக்கல் அருகே ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா நடைபெற்றது.

Update: 2024-04-27 07:30 GMT

நாமக்கல் அருகே ஏ.மேட்டுப்பட்டியில் உள்ள ஸ்ரீ ராமர் கோயிலில், ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் மரக்கன்றுகளை நட்டு, நடைபெற்ற உழவாரப்பணிகளை துவக்கி வைத்தார்.

நாமக்கல்,

நாமக்கல் அருகே ஏ.மேட்டுப்பட்டி, ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப் பணிகள் துவக்க விழா நடைபெற்றது.

நாமக்கல்லில் இருந்து திருச்சி செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள ஏ.மேட்டுப்பட்டி கிராமத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ராமர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில், கோவை ராமகிருஷ்ணா மிஷன் அனைத்து வித்யாலயா முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் (ஏவிஏஏ) உழவாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

உழவாரப்பணி துவக்க விழாவிற்கு, பஸ் அதிபர் தயாளன் தலைமை வகித்தார். பசுமை நாமக்கல் செயலாளர் தில்லை சிவக்குமார் வரவேற்றார். முன்னாள் மாவட்டக் கல்வி அலுவலர் உதயகுமார், எம்.மேட்டுப்பட்டி பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு, விழாவினை துவக்கி வைத்தனர். இன்ஜினியர் மாணிக்கம், காசி விநாயகர் கொங்குநாட்டு வேளாளர் அறக்கட்டளை தலைவர் கந்தசாமி, கோயில்  அர்ச்சகர் பிச்சுமணி அய்யர், கோயில் அறங்காவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் உழவாரப்பணியை துவக்கி வைத்தனர்.

கிரீன் பார்க் கல்வி நிறுவனங்களின் இயக்குனர் குருவாயூரப்பன் ராமர் கோயில் தல வரலாறு குறித்துப் பேசினார். நாமக்கல் அர்பன்பேங்க் பொது மேலாளர் ராமலிங்கம், பழனிசாமி, கண்ணன், சந்திரசேகரன், பூபதி, செல்வகுமார், பக்தப் பிரமுகர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, கோயிலை சுற்றிலும் சுத்தம் செய்து உழவாரப் பணியில் ஈடுபட்டனர். முடிவில் அருணாசலம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News