மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-04-27 07:45 GMT

கோப்பு படம்


நாமக்கல் :

மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், மைத்துனரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா ஒழுகூர்பட்டியைச் சேர்ந்தவர் சிக்கத். இவரது மகன் யுவராஜ் (32). இவரது தங்கை வனிதா (28). வனிதாவை அதே பகுதியை சேர்ந்த, தனியார் பஸ் டிரைவர் சந்தோஷ்(30) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இந்நிலையில் சந்தோஷுக்கும் வனிதாவுக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது.

குடும்ப பிரச்சினை காரணமாக வனிதா கோபித்துக் கொண்டு அவரது தாய் வீட்டில் வீட்டிற்கு சென்று அங்கு இருந்தார். வனிதா வீட்டிற்கு வராததால் ஆத்திரமடைந்த சந்தோஷ், மைத்துனர் யுவராஜ் வீட்டிற்கு சென்று தனது மனைவியை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு தகராறில் ஈடுபட்டார்.

அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சந்தோஷ் வனிதாவின், அண்ணன் யுவராஜை சரமாரியாக தாக்கினார். இதில் யுவராஜுக்கு தலை மற்றும் பல்வேறு பகுதியில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு திவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து யுவராஜ் பரமத்தி போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் வழக்குப் பதிவு செய்து சந்தோஷைக் கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர், பரமத்தி மாஜிஸ்திரேட் கோர்ட்டில்  ஆஜர்படுத்தப்பட்ட சந்தோஷ், பரமத்தி கிளை சிறையில், ரிமாண்ட் காவலில் அடைக்கப்பட்டார். 

Tags:    

Similar News