ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!

ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Update: 2024-04-27 07:45 GMT

பைல் படம் : ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம் போலீசார் தீவிர விசாரணை

நாமக்கல், 

பரமத்தி வேலூர் அருகே திருமண முத்தாறில் வாலிபர் மர்ம முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் தாலுகா நன்செய் இடையாறு பகுதியை சேர்ந்தவர் ராமசாமி(55). இவரது மகன் பூபாலன்( 30). இவர் பிவிசி கதவு செய்யும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு நெடுநேரம் ஆகியும் வேலை முடிந்து, பூபாலன் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று தேடிப் பார்த்தனர். ஆனால் பூபாலனை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் அடுத்த நாள் காலை சுமார் 6.30 மணியளவில், ஓலப்பாளையம் அருகே உள்ள திருமணிமுத்தாறு பாலம் வழியாக சென்றவர்கள் தண்ணீரில் வாலிபர் சடலம் மிதந்து கொண்டிருந்ததைக் கண்டனர். அவர்கள் இது குறித்து பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், மகனை காணாமல் தேடிய பெற்றோருக்கு தகவல் தெரிவித்து, அவர்களை அங்கு வரவழைத்தனர் அவர்கள் பூபாலனின் உடலைப் பார்த்து அடையாளம் கண்டனர். இதுகுறித்து ராமசாமி பரமத்திவேலூர் போலீசில் புகார் செய்தார். இதையொட்டி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி வழக்குப் பதிவு செய்து, சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். காணாமல் போன பூபாலன் திருமணிமுத்தாறு பகுதியில் சடலமாக கிடந்துள்ளார். அவரை யாராவது கொலை செய்தார்களா, அவர் தற்கொலை செய்துகொண்டாடரா என்பது குறித்து பரமத்தி வேலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News