ப.வேலூர் ஸ்ரீ சக்தி கண்ணனூர் புது மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா

பரமத்தி வேலூர், ஸ்ரீ சக்தி கண்ணனூர் புது மாரியம்மனுக்கு சித்திரை விழாவில் பூச்சொரிதல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

Update: 2024-04-27 02:00 GMT

பரமத்திவேலூர் ஸ்ரீ சக்தி கண்ணனூர் புது மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

பரமத்தி வேலூர், ஸ்ரீ சக்தி கண்ணனூர் புது மாரியம்மனுக்கு சித்திரை விழாவில் பூச்சொரிதல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் பேட்டை ஸ்ரீ சக்தி கண்ணனூர் புது மாரியம்மன் கோயிலில் கடந்த ஒரு வாரமாக சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. அதன் முக்கிய நிகழ்வாக, வானவேடிக்கை மற்றும் நாதஸ்வரம் முழங்க மூலவர் மாரியம்மனுக்கு பலவகை வாசனை திரவியங்கள் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பின்னர் சமயபுரம் மாரியம்மன் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, ஏராளமான பக்தர்கள் பூத்தட்டுக்களுடன், முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்தனர். அவர்கள் கோயிலை அடைந்ததும், ஸ்ரீ சக்தி கண்ணனூர் புது மாரியம்மனுக்கு பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து உற்சவர் அம்மனை காமதேனு வாகனத்தின் மேல் எழுந்தருளச்செய்து கம்பம், வேல் ஆகிய தெய்வங்களுக்கு தீப ஆராதனை உடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. காமதேனு வாகனம் மீது எழுந்தருளிய உற்சவர் மாரியம்மன் முக்கிய வீதிகளின் வழியாக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News