நாமக்கல் நகருக்குள் 2 நாட்கள் லாரிகளை இயக்க வேண்டாம்: சங்க தலைவர் வேண்டுகோள்

தமிழக முதல்வரின் வருகையை முன்னிட்டு, நாமக்கல் நகர எல்லைக்குள் 2 நாட்கள் லாரிகளை இயக் வேண்டாம் என்று லாரி உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Update: 2022-07-01 11:45 GMT

பைல் படம்

தமிழக முதல்வரின் வருகையை முன்னிட்டு, நாமக்கல் நகர எல்லைக்குள் 2 நாட்கள் லாரிகளை இயக் வேண்டாம் என்று லாரி உரிமையாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்க தலைவரும், மாநில சம்மேளன செயலாளருமான வாங்கிலி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

நாமக்கல்லில் நாளை 3ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று 2ம் தேதி மாலை நாமக்கல் வருகிறார். இதையொட்டி, 2 நாட்கள் நாமக்கல் நகர எல்லைக்குள் லாரிகள், ட்ரெய்லர்கள், எல்பிஜி வாகனங்கள் உள்ளிட்ட கனரக வாகனங்களை இயக்க வேண்டாம். வாகனங்களை புறநகர் பகுதிகளிலும், பைபாஸ் ரோடுகளில் மட்டும் இயக்கி போலீசாருக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News