தடுப்பூசி பற்றாக்குறை: ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் பொதுமக்கள்

Update: 2021-06-07 08:22 GMT

தடுப்பூசி போட வந்த பொதுமக்கள்

கரூர் மாவட்டத்தில், 30-க்கும் மேற்பட்ட மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில் இன்று தடுப்பூசி போடுவதற்காக ஆயிரக்கணக்கான மக்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தடுப்பு ஊசி மையங்களில் இன்று தடுப்பூசி இல்லை என அறிவிப்பு பலகை வைத்ததால். பொதுமக்கள் தடுப்பூசி போடுவதற்காக வந்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

கரூர் பசுபதீஸ்வரர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்டவர்கள். தடுப்பூசி செலுத்திக் கொள்ள வந்தனர். அங்கு தடுப்பூசி ஸ்டாக் இல்லை என்ற போர்டு வைக்பட்டிருந்த்தைக் கண்டு அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.  உடனடியாக அவர்கள் கலைந்து செல்லாமல் நின்றிருந்தனர். . போலீசார் அவர்களை தடுப்பூசி இல்லை ஆகையால் கலைந்து செல்லுங்கள் என்று அறிவுறுத்தினர்.

பல நாள்களாக அலைந்து திரிந்து டோக்கன் வாங்கி தடுப்பூசி செலுத்த வந்தால் ஊசிமருந்து இல்லை என்கின்றனர் என போலீசாருடன் பொதுமக்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News