சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

Update: 2021-02-16 09:15 GMT

கரூரில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கரூர் பேருந்து நிலையம் அருகில் இருந்து விழிப்புணர்வு பேரணியை கரூர் மாவட்ட எஸ்பி பகலவன் கொடியசைத்து தொடங்கி வைத்தார் . இதில் தனியார் கல்லூரி மாணவ மாணவிகள் சுமார் 200 க்கும் மேற்பட்டோர் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்திக்கொண்டு சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு பேரணியாக சென்றனர்.இந்த பேரணி பேருந்து நிலைய பகுதியில் இருந்து தொடங்கி திண்ணப்பா கார்னர், சர்ச் கார்னர் வழியே சென்று கரூர் தலைமை தபால் நிலையத்தில் நிறைவடைந்தது .

Tags:    

Similar News