தேர்தல் முன் விரோதம்: வீடு நொறுக்கப்பட்டது. வாகனங்களுக்கு தீ வைப்பு
விருதுநகர் அருகே தேர்தல் முன் விரோதம் காரணமாக ஏற்பட்ட மோதலில் வீடு நொறுக்கப்பட்டது, வாகனங்கக்கு தீவைப்பு
HIGHLIGHTS
விருதுநகா் அருகே உள்ள வடமலைக்குறிஞ்சி கிராமத்தை சேர்ந்தவா் தங்கப்பாண்டி.கூலி வேலை பார்த்து வருகிறார். தங்கப்பாண்டிக்கும் அதே கிராமத்தை சேர்ந்த மாதவன் என்பவருக்கும் 2011ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தோ்தலில் மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த ஆண்டும் தங்கப்பாண்டிக்கும் மாதவனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த வழக்கில் மாதவன் கடந்த ஒரு ஆண்டாக விருதுநகா் கிளை சிறையில் மாதவன் உள்ளார்.
இந்த நிலையில் இன்று மாலை தங்கப்பாண்டியும் அவரது மணைவி லாவண்யாவும் விருதுநகரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வடமலைக்குறிஞ்சி செல்லும்போது, சின்னமூப்பன்பட்டி அருகில் மாதவன் ஆதரவாளா்கள் 5 போ் கொண்ட கும்பல் காரை ஏற்றி தங்கப்பாண்டியை கொலை செய்ய முயற்சி செய்தாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த தங்கப்பாண்டியும் லாவண்யாவும் விருதுநகா் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா்.
இதனால் ஆத்திரமடைந்த தங்கப்பாண்டி ஆதரவாளா்கள், வடமலைகுறிஞ்சியில் மாதவனின் உறவினரான மணிமாறன் என்பவரது வீட்டை அடித்து நொறுக்கி, வீட்டின் அருகில் இருந்த 2 இருசக்கர வாகனத்தை தீயிட்டு எரித்து உள்ளனா். மேலும் அருகில் இருந்த 4 இருசக்கர வாகனங்களையும் அடித்து நொறுக்கி உள்ளனா். இதனால் வடமலைக்குறிஞ்சி கிராமத்தில் பதட்டமான சூழ்நிலை உருவாகி உள்ளது.
தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்ற ஆமத்தூர் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.