விருதுநகரில்மருத்துவபணியாளர்களுக்குகலெக்டர் பணிநியமன ஆணையை வழங்கினார்.
பேரிடர் காலத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுரை.
HIGHLIGHTS
விருதுநகரில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 130 பல்நோக்கு மருத்துவ பணியாளர்களுக்கு கலெக்டர் கண்ணன் பணி நியமன ஆணையை வழங்கினார்
கொரோனோ 2ம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 795 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 130 பல்நோக்கு மருத்துவ பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கண்ணன் பணியனையை வழங்கினார்.
முன்னதாக விருதுநகர் மாவட்டத்தில் 38 மருத்துவர்களும், 107 செவிலியர்களும் தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டு பணிநியமனை ஆணை வழங்கப்பட்ட நிலையில், மேலும் கொரோனா தடுப்பு பணிகளுக்காக 130 பல்நோக்கு மருத்துவ பணியாளர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. அனைத்து பணியாளர்களும் இணைந்து இந்த பேரிடர் காலத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடன் அனைவரும் செயல்பட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்