/* */

அணையின் கட்டுமான பணிகள்: அமைச்சர் துவக்கி வைத்தார்

வீடூர் அணையின் கட்டுமானங்களை புனரமைத்தல் மற்றும் தூர்வாரும் பணியை சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

அணையின் கட்டுமான பணிகள்: அமைச்சர் துவக்கி வைத்தார்
X

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், வீடு நீர்த்தேக்கம் திட்டம் வராக நதி மற்றும் தொண்டி ஆறு ஒன்று சேருமிடத்தில் 1958 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 1959 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. வீடூர் அணை கட்டப்பட்டு 60 ஆண்டுகள் ஆன நிலையில் நீர்பிடிப்பு பகுதியில் 109 மில்லியன் கன அடிக்கு வண்டல் மண் படிந்து வீடூர் அணை கொள்ளளவு 496 மில்லியன் கன அடியாக குறைந்துள்ளது. என 2009 இல் IHH பூண்டி மூலம் மேற்கொள்ளப்பட்ட கொள்ளளவு குறித்து செய்யப்பட்ட ஆய்வின்போது கண்டறியப்பட்டது.

வீடூர் அணையின் முழு கொள்ளளவை மீட்டெடுக்க வீடூர் அணை தூர்வாருதல், பிரதான பாசனக் கால்வாய் சிமெண்ட் கான்கிரீட் கால்வாயாக மாற்றுதல், பிரதான பாசன கால்வாய் தூர்வாருதல், பிரதானக் கிளை கால்வாய் தூர் வாருதல், வீடூர் அணையின் கட்டுமானப் பணிகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளின் மூலம் ரூபாய் 42.44 கோடி மதிப்பீட்டில் நிர்வாக ஒப்புதல் அரசாணை பெறப்பட்டு பணிகள் துவங்கப்படும் நிலையில், இன்று தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் அதற்கான பூமி பூஜையை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயாசிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Feb 2021 11:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...