/* */

திருவண்ணாமலை மாவட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

திருவண்ணாமலை மாவட்டத்தில் புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமை யொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்ட  பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
X

சிறப்பு அலங்காரத்தில் பூதநாராயண பெருமாள்.

புரட்டாசி மார்கழி மாதங்களில் பெருமாள் பக்தர்கள் மாதம் முழுவதும் விரதங்கள் மேற்கொண்டு திருப்பதி சென்று பெருமாளை தரிசிப்பது அல்லது பக்கத்தில் உள்ள பெருமாள் கோவில்களுக்கு செல்வது வழக்கம்.

அவ்வகையில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை யொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் மூலவருக்கு நேர் பின்புறம் அமைந்துள்ள வேணுகோபால பெருமாள் சன்னதியில் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.

திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாட வீதியில் அமைந்து உள்ள பூதநாராயண பெருமாள் கோவில், அண்ணா நுழைவு வாயில் அருகில் பெருமாள் கோவில், பல்லவன் நகரில் திருப்பதி ஏழுமலையான் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

ஆரணி நகரில் உள்ள பெருந்தேவி தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவில் புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் சிறப்பு பூஜை நடைபெற்றது. திருப்பதி பாலாஜி அலங்காரத்தில் வரதராஜ பெருமாளை அலங்கரித்து மகா தீபாராதனை நடைபெற்றது.

அதேபோல் ஆரணி கொசப்பாளையம் பகுதியில் உள்ள அலமேலு மங்கை சமேத சீனிவாச பெருமாள் கோவில் தச்சூர் சாலையில் உள்ள கோதண்டராமர் கோவில் சத்தியமூர்த்தி சாலையில் உள்ள சீதா தேவி சமேத ராமர் கோவில் சைதாப்பேட்டையில் உள்ள ஆதி பெருமாள் கோயில் ஆகிய கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

போளூர் வேணுகோபாலசாமி பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் பூஜைகள் நடைபெற்றது. மலை மேல் உள்ள யோக நரசிம்மர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

செங்கத்தில் பிரசித்தி பெற்ற ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் சிறப்பாக அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. மூலவர், உற்சவர் மற்றும் கோவில் உள்ள அனைத்து சந்நிதிகளிலும் விசேஷ அபிஷேகங்கள் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து வண்ணமலர்களால் அலங்கரித்து மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கண்ணமங்கலம் அருகே படவேடு கோட்டைமலை மீது 2,660 அடி உயரத்தில் உள்ள வேணுகோபாலசாமி கோவிலில் புரட்டாசி 3-ம் சனிக்கிழமை உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

காலை நேரத்தில் மூலவர் மீது சூரிய ஒளி விழும் அற்புத காட்சியை காண திரளான பக்தர்கள் இரவிலேயே கோவிலில் காத்திருந்து தரிசனம் செய்தனர். உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து உட்பிரகார உலாவும், மாலையில் படவேடு பகுதியில் திருவீதி உலாவும் நடைபெற்றது.

வந்தவாசி அருகே நல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள சுந்தரவல்லி சமேத சுந்தரவரத பெருமாள் கோவிலில் பால், தயிர், பன்னீர், இளநீர் மற்றும் விசேஷ திருமஞ்சன திரவியங்கள் கொண்டு அனைத்து சாமிகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது.

மேலும் புது வஸ்திரம் மற்றும் நூதன திருவாபரணங்கள், பூ மாலைகள் சாற்றி கோவில் வெளி பிரகாரத்தில் திருப்பதி மலையில் உள்ள சீனிவாச பெருமாள் மற்றும் பத்மாவதி தாயார் போல் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Updated On: 9 Oct 2022 2:49 AM GMT

Related News