/* */

பேரூரணி காவலர் பயிற்சி பள்ளியில் சிறப்பு விழிப்புணர்வு பட்டிமன்றம்

காவலர் பயிற்சிப் பள்ளியில் காவலர்களுக்கு மன அழுத்தத்தைப் போக்கவும், மனமகிழ்ச்சி ஏற்படுத்தவும் சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது.

HIGHLIGHTS

பேரூரணி காவலர் பயிற்சி பள்ளியில் சிறப்பு விழிப்புணர்வு பட்டிமன்றம்
X

பேரூரணி காவலர் பயிற்சி பள்ளியில் நடைபெற்ற பட்டிமன்றம்.

நெல்லை அருகே உள்ள பேரூரணி காவலர் பயிற்சி பள்ளியில் காவலர்களுக்கு மன அழுத்தத்தை போக்கவும், மன மகிழ்ச்சியை ஏற்படுத்தவும், பயிற்சியில் ஆர்வமூட்டவும், காவல் பயிற்சி முதல்வர் காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் தலைமையில் சிறப்பு விழிப்புணர்வு பட்டிமன்றம் நடைபெற்றது.

பயிற்சி பள்ளி துணை முதல்வர், ஏடிஎஸ்பி., அனிதா தொடக்கவுரை வழங்கினார். வந்திருந்தவர்களை காவல் ஆய்வாளர் பாபுனி வரவேற்று பேசினார். பட்டிமன்ற நடுவராக முனைவர் கவிஞர்.கோ.கணபதி சுப்பிரமணியன் செயல்பட்டார். ஆண்களுக்கு நிகராக பெண்களால் சாதிக்க முடியுமா? முடியாதா ? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

முடியும் என்று சொல்லரசி சீதாபாரதி, நாஞ்சில் ஆசிரியை பாமா, பயிற்சி பள்ளி மாணவிகள் மஞ்சு, ப்ரித்தி ஆகியோரும் வாதிட்டனர். முடியாது' என்று நாவலர் முனைவர் இராம பூதத்தான், பயிற்சி பள்ளி மாணவிகள் நாகதேவி, கோபிகா, எழுத்தாளர் மூ.வெ.ரா ஆகியோரும் வாதிட்டனர்.

நிறைவாக நடுவர் முனைவர் கவிஞர்.கோ. கணபதி சுப்பிரமணியன் ஆண்களுக்கு நிகராக பெண்களால் சாதிக்க முடியும். தொட்டிலை ஆட்டும் கை தொல்லுலகை ஆளும் கை. உங்களால் எதையும் சாதிக்க முடியும் தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்டு செயல்பட்டால் சாதனை கண்டிப்பாக நிகழும் என்று தீர்ப்பு வழங்கினார். தொடர்ந்து பயிற்சி பள்ளி மாணவிகளின் தனித்திறமைகளும், வீர தீர விளையாட்டுகளும் நடைபெற்றது.

Updated On: 3 April 2022 5:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  2. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  3. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  4. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  5. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  6. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  8. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  9. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...