தச்சநல்லூர் பகுதிக்கு புதிய பேருந்து வசதி: எம்எல்ஏ தொடக்கம்
தச்சநல்லூர் மண்டல 1வது வார்டு மக்களின் கோரிக்கையை ஏற்று எம்எல்ஏ அப்துல் வகாப், துணை மேயர் ராஜு தொடக்கி வைத்தனர்.
HIGHLIGHTS
திருநெல்வேலி மாநகராட்சி துணைமேயர் கே.ஆர்.ராஜூ தச்சநல்லூர் மண்டலம் வார்டு 1 பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று வண்ணார்பேட்டை முதல் சிதம்பரம்நகர், தாழையூத்து மின்வாரிய அலுவலக வழிதடத்தில் அரசு பேருந்து இயக்கத்தை தொடக்கி வைத்தார்.
அதனை பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல்வகாப், மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள். திருநெல்வேலி மாநகராட்சி தச்சை மண்டலம் வார்டு 1 பொதுமக்களின் கோரிக்கையினை ஏற்று துணைமேயர் கே.ஆர்.ராஜூ அரசு பேருந்து வசதி ஏற்பாடு செய்திருந்தார். வண்ணார்பேட்டை முதல் தச்சநல்லூர், சிதம்பரம்நகர் வழியாக தாழையூத்து EB வரையிலான வழிதடத்தில் செல்லும் அரசு பேரூந்தினை பாளை சட்டமன்ற உறுப்பினர் மு.அப்துல்வகாப் , மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பேச்சிபாண்டியன், தர்மர் மற்றும் அரசு போக்குவரத்து அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.