நெல்லை: பெண் கொலை வழக்கில் 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது
திருமலைகொழுந்தபுரத்தில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
HIGHLIGHTS
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 5 நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைப்பு.
திருநெல்வேலி மாவட்டம், தாலுகா காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட திருமலைகொழுந்து புரத்தை சேர்ந்த மாதா(55) என்பவரை 14.03.2022 அன்று இடப் பிரச்சினை காரணமாக கொலை செய்தனர். இது தொடர்பான வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகள் 5 பேரும் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் கவனத்திற்கு வந்தது. அதனைத் தொடர்ந்து குற்றவாளிகளை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் பாலகிருஷ்ணன் க்கு அறிவுறுத்தினார். அதனடிப்படையில் குற்றவாளிகளை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில்,18.04.2022 இன்று திருமலைக் கொழுந்துபுரம் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் முத்து இசக்கி என்ற இசக்கி(23), அடைக்கலம் என்பவரின் மகன்கள் இசக்கிமுத்து (31), கண்ணன் (40), கண்ணாசாமி என்பவரின் மகன் அடைக்கலம்(38), மணக்காடு பகுதியை சேர்ந்த கணபதி என்பவரின் மகன் சண்முக சுந்தரம் என்ற சுந்தர் (36) ஆகியோர் குண்டர் சட்டத்தில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.