இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் நெல்லையில் ஆர்ப்பாட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வலியுறுத்தி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
HIGHLIGHTS
தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் உள்ள தி.மு.க. தனது சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் புதிய ஓய்வூதிய திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் என அறிவித்திருந்தது. அந்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசு சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் கூறியதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற முழக்கங்களை எழுப்பினர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.