Begin typing your search above and press return to search.
தீபாவளியை முன்னிட்டு ஏழைகளுக்கு வேட்டி, சேலை வழங்கல்
தீபாவளியை முன்னிட்டு, நெல்லை பத்ம ஹஸ்தா கோசாலா அறக்கட்டளை சார்பில், ஏழை, எளிய மக்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கப்பட்டன.
HIGHLIGHTS
தீபாவளி பண்டிகை வரும் வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், இதை முன்னிட்டு ஏழை, எளிய மக்களுக்கு, நெல்லை பத்ம ஹஸ்தா அறக்கட்டளை மூலமாக. தொடர்ச்சியாக ஆறாவது ஆண்டு இலவச வேட்டி சேலைகள் வழங்கும் விழா நடைபெற்றது. நெல்லை டவுண் சாலியர் தெருவில் அமைந்துள்ள, ஸ்ரீ தர்மராஜா திரெளபதி அம்பாள் திருக்கோவில் சன்னதியில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில், 250க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு, வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.
இதில், பத்ம ஹஸ்தா கோசாலா அறக்கட்டளை நிறுவனர் பாஞ்சாலராஜன் மற்றும் லிட்டில் பிளவர் பள்ளி தலைமை தாளாளர் மரிய சூசை, தீயணைப்பு துறை அதிகாரி ராதாகிருஷ்ணன், சக்திசாய் டி.எம்.பி. தர்மராஜ், பரந்தாமன், செல்வராஜ், கோபால், கோபி, அழகர் ஆகியோர் மூலமாக, டவுனில் உள்ள மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.